Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆட்ட நிர்ணயம் குறித்து ஐசிசியிடம் முறைப்பாடு...!

 

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (23) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு, சர்வதேச கிரிக்கட் பேரவையின் “ஊழல் தடுப்பு பிரிவின்” பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலுக்கு இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு அறிவிக்க தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நற்பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments