Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்…!



உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 100 என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.



இதையடுத்து, வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில்,

''அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.



அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில் சற்றுமுன் அவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.



தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,



"ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

100 ஆவது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments