Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மாடுகளை கரையேற்ற வாவிக்குள் சென்ற நபரை முதலை இழுத்து சென்றது...!


மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி - கல்முனை பிரதான வீதியை இணைக்கின்ற சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி வாவி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடுகளை மேய்த்துக் கொண்டு கல்முனை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வேளையில் கிட்டங்கி வாவியினுள் ஒரு சில மாடுகள் இறங்கிய நிலையில், குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது.



இவ்வாறு முதலை பிடியினால் காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1, பிரிவு 157, விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த 30 வயதான சுகிர் பிரதாஸ் என்பவராவார்.

குறித்த நபரின் சடலம் நேற்று (23) முதல் தேடப்பட்டு வந்த நிலையில், கடற்படையின் சுழியோடி பிரிவு, அம்பாறை உயிர் பாதுகாப்பு பிரிவு மற்றம் சவளக்கடை பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.



மேற்படி பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

பாறுக் ஷிஹான்

Post a Comment

0 Comments