Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சென்ற மாதம் இலங்கை தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய வெளிநாட்டுப் பணத்தின் தொகை அதிகரிப்பு...!


2022 டிசம்பரில் ( வெளிநாடுகளில் வேலை செய்யும் ) இலங்கை தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, இது 2021 டிசம்பரில் பதிவான
தொகையுடன் ஒப்பிடுகையில் 46% (US$ 150 மில்லியன்) அதிகரிப்பாகும்.

டிசம்பரில் அனுப்பப்பட்ட பணமும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது , இது US$ 384.4 மில்லியன் (நவம்பர் 2022) என பதிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், CBSL தரவுகளின்படி, கடந்த 8 ஆண்டுகளில் இலங்கை பெற்ற வெளிநாட்டு ஊழியர்களின் மொத்த தொகையின் மிகக்குறைந்த வருடாந்த மொத்த தொகையை 2022 பதிவு செய்துள்ளது, மொத்தம் 3.78 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments