Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜனாதிபதிக்குள்ள அரசியலமைப்பு அதிகாரத்தின் பிரகாரமே பணிகள்...!


பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் பதவிகளுக்கான நியமனங்கள், அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இடம்பெறுகிறது. எனவே, ஜனாதிபதியின் இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது அரசியலமைப்பை மீறுவதாக அமைகிறது.

அரசியலமைப்பின் 4 (ஆ) உறுப்புரையின் கீழ், இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துகிறார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நிறைவேற்று அதிகாரத்தின் பிரதானி என்ற வகையிலும், அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு அமையவும் ஜனாதிபதியின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பிற்கு அமையவும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அரசாங்க பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன.அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் கீழ், பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில்,அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி முன்வைத்த சிபாரிசுக்கு அங்கீகாரம் கிடைத்த பின்னரே,அப்பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டது.



ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கு செய்யப்படும் இடையூறுகள் அரசியலமைப்பு மீறலாகவே கருதப்படும். ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினால், அதற்கான நடவடிக்கைகளும் அரசியலமைப்பிலேயே வழங்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக செயற்படுகிறது. அத்தோடு, அரசியலமைப்புக்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் ஒத்துழைப்பையும் அரசியலமைப்புப் பேரவை வழங்குகிறது. அரசியலமைப்புப் பேரவையானது அரசியலமைப்பிற்கு அமைவாக தனது கடமைகளை மேற்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் பிரகாரம் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான தனது கடமையை மேற்கொள்ளாமல் தவிர்க்குமாறு, அரசியலமைப்பு பேரவைக்கு பணிப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அரசியலமைப்புச் சபையானது அரசியலமைப்பிற்கு முரணாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினால், அதற்கான தீர்வுகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments