Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது...!


போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் .

போகம்பர சிறைச்சாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிறைச்சாலையின் பிரதான கட்டிடத்தின் காலனித்துவ கட்டிடக்கலையை பாதுகாத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் இதன் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கங்களாகும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் ஏகநாயக்க கூறுகிறார்.

பிரதான சிறை வளாகம் வணிக வளாகம், உணவு விடுதி , அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் வணிக கட்டிடமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments