Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வடக்குக்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்…!


வடக்குக்கான ரயில் சேவைகள் நாளை 28ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி ரயில் சேவையும், பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிய ரஜரட்ட ரயில் சேவையும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும், வடக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் கடவைகளை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக கடவைகளை பயன்படுத்த வேண்டும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments