Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பாடசாலையில் துப்பாக்கிச்ச்சூட்டு சம்பவம் தொடர்பிலான தகவல்...!



அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி நேற்று (16) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இதன்போது இருவர் உட்பட துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மாணவியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாடசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் சுமார் 390 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், இத் துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments