
துருக்கியிலுள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததோடு 32 பேர் காயமடைந்துள்ளனர்.
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா நகரிலுள்ள ஹோட்டலில் நேற்று (20) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததோடு 32 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவலறிந்து சம்பவவிடத்திற்கு வருகை தந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். ஹோட்டல் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால், தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விருந்தினர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த ஹோட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments