2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலத்தை முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments