Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அரிசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் வருமானம்...!



இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அரிசி இறக்குமதி அனுமதிப்பத்திர கட்டுப்பட்டை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான ஒழுங்குவிதிகள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன.

அரிசி இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும், இந்தக் காலகட்டத்தில் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 65 ரூபா வரியினால் அரசாங்கத்திற்கு 10.9 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அரிசித் தட்டுப்பாடு குறித்து குழுவில் ஆராயப்பட்டது. அரிசி உற்பத்தி மற்றும் போதிய தொகையைப் பேணுவது தொடர்பில் துல்லியமான தகவல்களை விவசாய அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்கள் பேணுவதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2384/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீளவும் ஆராயப்பட்டு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காக இந்த ஒழுங்குவிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் சுகாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு தொடர்பான ஒழுங்குவிதிகளில் காணப்படும் பிரச்சினைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments