Trending

6/recent/ticker-posts

நிர்வாண சைக்கிள் ஓட்டியின் புதுமையான விளக்கம்...!!



கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து, அவரை கைது செய்ய பின்தொடர்ந்த போதிலும், அவர்களில் எவராலும் அவரை அடைய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கேகாலை மற்றும் மாவனெல்லா பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தடுத்து அந்த நபரைப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​

​அவர் பீதுருதலாகலைப் பார்வையிட வந்ததாகக் கூறினார். அவர் அஹங்கமவிலிருந்து வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், திங்கட்கிழமை (03) காலை புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும், அவ்வப்போது தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டதாகவும் கூறினார்.

வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது ஆடைகளைக் கழற்றியதாகவும், அவர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் போனையும் வழியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments