Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



1000 வருட பிரச்னை; இந்தியா - பாகிஸ்தான் பார்த்துக் கொள்வார்கள்': பஹல்காம் தாக்குதல் குறித்து டிரம்ப்...!



இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் 1000 ஆண்டுகளாகப் போராடி வருவதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காஷ்மீர் எல்லையில் 1500 ஆண்டுகளாக பதட்டங்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்த டிரம்பிடம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களுடன் பேசுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப் இது சமீபத்திய காலங்களில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் உங்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1000 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ (அ) வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களை தொடர்பு கொள்வாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்த டிரம்ப் "1000 ஆண்டுகளாக காஷ்மீர் போராட்டத்தைக் கொண்டுள்ளது. எல்லை பதட்டத்தை சரிசெய்வதற்கான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புகிறேன். காஷ்மீர் எல்லையில் 1500 ஆண்டுகளாக பதற்றம் உள்ளது அவர்கள் அதை எப்படியாவது சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments