
அஜித் தற்போது சினிமா மட்டுமின்றி கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவரை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம பூஷன் விருதை இந்திய அரசு சமீபத்தில் வழங்கி இருந்தது.
மேலும் அவர் டெல்லியில் ஒரு பிரபல மீடியாவுக்கு முதல் முறையாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் பல விஷயங்கள் பற்றி அவர் பேசி இருக்கிறார்.
விஜய் அரசியல் என்ட்ரி.. தைரியம் வேணும்.!
விஜய் அரசியலில் குதித்தது பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்க, 'எனக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்கிற விருப்பம் இல்லை. எனது Peers (மற்ற சக நடிகர்கள்) அரசியலில் நுழைந்திருப்பது அவர்களது தனிப்பட்ட முடிவு.'
'அது அவர்கள் நம்பிக்கை. ஜனநாயகத்தில் சிறந்த விஷயம் என்னவென்றால் மக்கள் தான் இறுதியாக தலைவன் யார் என்பதை முடிவு செய்வார்கள்.'
'100% இந்த முடிவை எடுக்க பெரிய தைரியம் வேண்டும்' என அஜித் கூறி இருக்கிறார்.
0 Comments