அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை(16 ஆம் திகதி) தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரி நேற்று (13) காவல்துறை நிதி குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இலட்சக்கணக்கில் மோசடி
குறித்த சந்தேக நபர் மீது முப்பத்தைந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 Comments