
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments