
அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயதுடைய குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்,தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்றையதினம் வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.



0 Comments