
தீபாவளியை தீ ஒளி என முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.
இன்றைய நவீன உலகில் தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி தீபாவளி பண்டிகையை வரவேற் காத்திருக்கின்றனர்.
துன்பம் எனும் இருள் நீங்கி அமைதியும், சமாதானமும் அனைவரின் உள்ளங்களிலும் குடிகொண்டு, இன, மத பேதங்களை மறந்து அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் என தீபாவளியை அனைவரும் இணைந்து கொண்டாடும் சூழல் அனைவருக்கும் அமைய வேண்டுமென வசந்தம் டிஜிட்டல் செய்திப் பிரிவு சார்பாக வாழ்த்துகின்றோம்.
ஸ்டார் வானொலி மற்றும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



0 Comments