Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: கடுகண்ணாவ மண்சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு...!



கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கியிருந்த மேலும் இருவர், சற்றுமுன்னர் உடலங்களாக மீட்கப்பட்டதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

 

Post a Comment

0 Comments