
அதிக மழை காரணமாக இன்று காலை கண்டி கீழ் கடுகண்ணாவ பகுதியில் வர்த்த நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு அண்மையில் இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.
குறித்த வீதியை தற்காலிகமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



0 Comments