
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.



0 Comments