
இலங்கை உதைபந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து செயற்பட்டுவரும் குவைத் நாட்டை சேர்ந்த அப்துல்லா அல் முதைரியின் ஒப்பந்தக் காலம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவது அல்லது புதிய பயிற்சியாளர் அனுபவம் ஒன்றை நோக்கிச் செல்வது குறித்து விரைவில் தீர்மானிப்பதாகவும் அப்துல்லா அல் முதைரி குறிப்பிட்டுள்ளார்.
2027 ஆசிய கிண்ண தகுதிகாண் பிளேஓப் சுற்றுக்காக கடந்த 2024 ஓகஸ்டில் இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராகவே குவைட் நாட்டைச் சேர்ந்த முதைரி ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் இலங்கை அணி பெற்ற வெற்றிகளை அடுத்து 2024 நவம்பரில் இவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் நோபளம் மற்றும் ஆப்கான் அணிகளின் பயிற்சியாளராகவும் இவர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments