Trending

6/recent/ticker-posts

Live Radio

செல்லப் பிராணிகளை கடத்த முயன்ற நபர் கைது ...!


38 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர்.

சோதனையின் போது, ​​அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அபராதம் விதித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Post a Comment

0 Comments