
இலங்கைக்கன விஸ்தரிக்கப்பட்ட கடன் திட்டத்தின் 6வது தவணை குறித்தான பரிசீலனைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த மாத இறுதியில் அவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு 5 கடன் தவணைகளை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்கென சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமை அரசு மேற்nhண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படும்.
இதனையடுத்து 6வது கடன் தவணையை வழங்குவது குறித்து தேவையான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுக்கும்.



0 Comments