
அன்மையில் தமிழக முதலமைச்சர் விஜயின் கச்சத்தீவு குறித்த கருத்து இராணவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மை மற்றும் நோக்கங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக போராசிரியர் இந்துராகாரே தேரர் தெரிவித்துள்ளார்.
போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று மகாபிரிவெனாவில் இடம்பெற்றது . அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) கச்சத்தீவை மீட்பேன் என்று கூறியபோது யாழ்ப்பாணத்தில் உள்ள சில குழுக்கள் அதற்கு ஆதரவாகக் கோஷமிட்டுக் கொண்டாடினர் .
நாடாளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களும் இதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால், எமது தலைவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று பார்வையிட்டு, 'அங்கு பெற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை' எனக் கூறியிருந்தனர்.
'அதனைக் கொடுத்தாலும் பரவாயில்லை' என்ற ரீதியிலேயே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் போல் தோன்றுகிறது. இன்று நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு விஜய்யின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வட மாகாணத்தையுமே பெற்றுக் கொள்ளுமாறு கோரி வருகின்றனர்.
இந்த கொள்கை அல்லது அரசியல் நகர்வானது, எதிர்காலத்தில் எமது நாட்டின் இராணவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மை மற்றும் நோக்கங்களுக்குப் பாரிய சவாலாகவும், ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகவும் மாறப்போவது உறுதியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Comments