
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகப்பூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை (08) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
38 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments