Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தென்கிழக்கு லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! தாயும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு...!


பிரித்தானியாவில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்வெடெரில்(Belvedere) உள்ள மாடி வீட்ட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் கிடைத்த அழைப்பை அடுத்து , நேற்று இரவு மொட்டை மாடியில் உள்ள வீட்டிற்கு வந்த பொலிஸார், தாயார் நட்ஜா டி ஜாகர்(Nadja De Jager, 47) அவரது இரண்டு மகன்கள் அலெக்சாண்டர்(9) மற்றும் மாக்சிமஸ்(7) ஆகிய மூன்று பேர் இறந்து கிடப்பதை கண்டறிந்தனர்.

உயிரிழப்புக்கான காரணம்

தெரியாத நிலையில், துப்பறியும் அதிகாரிகள் விசாரணை தொடர்பாக வேறு யாரையும் தீவிரமாகத் தேடவில்லை. இருப்பினும் மூவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட உள்ளன.



அத்துடன் விசாரணை தொடர்ந்து வரும் துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஒல்லி ஸ்ட்ரைட், “இது மிகவும் சோகமான வழக்கு, இந்த சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து நிறுவி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

நட்ஜா டி ஜாகர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உயிரிழப்பு குறித்து அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நடுநிலை மற்றும்  நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...👇

Post a Comment

0 Comments