கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் காரணமாக இப்பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியதையடுத்து, கடும் மழை காரணமாக 27 முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்படி இன்று முதல் மீண்டும் பரீட்சை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும், நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இன்றைய தினம் நடைபெறவுள்ள பாடங்களின் படி, பரீட்சைகள் வழமை போன்று நடைபெறுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
0 Comments