
மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (14) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுலில் இருக்கும்..
பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல, பதுளை, வெலிமடை மற்றும் பசறை
கண்டி மாவட்டத்தில் மெததும்பர, உடுநுவர மற்றும் பாததும்பர
குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம
மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்டை, உக்குவெல.
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை.
0 Comments