Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: நாட்டிற்குள் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை...!



நாட்டிற்குள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெயைக் கொண்ட இரு கப்பல்கள் எதிர்வரும் சில நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து 90000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயைக் கொண்ட ஒரு கப்பலும், ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து 90000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயைக் கொண்ட கப்பலும் இவ்வாறு வருகை தரவுள்ளன.

பரவும் போலி பிரச்சாரங்கள் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த இடங்களில் நீண்ட வரிசை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாமெனவும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments