
சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயின் ஜங்ஹாய் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11:16 மணிக்கு 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
CENC இன் தகவல்படி, 18 நிமிடங்களுக்குப் பிறகு இதே மாகாணத்தில் 5.8 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது.
இரண்டு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தைக் கொண்டிருந்ததுடன், கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான ஸீனிங்கிலிருந்து (Xining) சுமார் 244 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளன.



0 Comments