Trending

6/recent/ticker-posts

Live Radio

குடிவரவுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது...!



குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Post a Comment

0 Comments