Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பில் - முஜிபுர் ரஹ்மான்…!


அதிகரித்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியை அடுத்து இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை சரி செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்தார்.

அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் அதே வேளையில், ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதால், மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் உலகம் கடுமையாக பிளவுபட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காக இலங்கை நிற்கிறது. புதிய அரசாங்கம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் உள்ள இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு ஏன் இலங்கைப் படைகள் பாதுகாப்பு வழங்குகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments