
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சபுகஸ்கந்தாவில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த சாரணர்கள் குழு படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் வீதியை விட்டு விலகி ஒரு மேட்டில் மோதி கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பஸ்ஸின் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில், பஸ்ஸில் 20 சிறுவர்கள் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



0 Comments